Skip to content

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காருண்யா அடுத்த நல்லூர்வயல் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதேபோல் நேற்றும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஊருக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!