Skip to content

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார்.

தஞ்சை விமானப்படை தளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தைனேஷ்குமார் பைக்கிலிருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தைனேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தைனேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!