Skip to content
Home » டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், தீ விபத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஜவஹர்லால் நேரு பவன் டில்லியில் அமைந்துள்ள அரசு அலுவலக கட்டிடம். இந்த கட்டிடத்தில் வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்பட பல அரசு துறைகளின் அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!