இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தென் தமிழக மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 14) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும்.