Skip to content
Home » தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

தஞ்சாவூரில் அஞ்சல் குறைதீர் மன்றக் கூட்டம் வரும் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என தஞ்சை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.. இந்த குறைதீர் மன்ற கூட்டம் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் பின்புறம்) நடக்கிறது. பொது மக்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை தபால் மூலம் இந்த அலுவலகத்திற்கு வரும் 20ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் குறைதீர் மன்றக் கூட்டத் தில் கலந்துக் கொண்டு தங்கள் குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமாக அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!