Skip to content

வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (75). இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவரது அறையின்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. பின்னர் ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேதுராமன் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!