சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் வசிக்கும் ஏ.சி. மெக்கானிக்கான ரகுமான் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கடிச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார். அதேபோல் திருச்சி கூனிபஜார் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. அஷ்ரப் அலி அவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நிதி வசூல், மூளை சலவை செய்தல், உபகரணங்கள கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.