Skip to content

கரூர் அருகே ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள நல்லசெல்லிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கலசத்தினை

சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்த உடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் கலசத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் விநாயகர் மற்றும் பகவதி அம்மனுக்கு சிறப்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் ஆலயம் வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!