Skip to content
Home » சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்றார். அப்போது பேசிய எடப்பாடி,  திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசிடம் அத்துமீறிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

அதற்கு பதிலளித்த முதல்வர்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசிடம் தவறாக நடந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!