கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல், மரவாபாளையம்,பேச்சிப்பாறை, திருக்காடுதுறை தவிட்டுப்பாளையம்,புஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவார்பச்சை நாடான்,கற்பூரவல்லி, ரஸ்தாளி,மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெளி
மாவட்டங்களுக்கும், கரூரில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களுக்கு கிராக்கி ஏற்பட்டதால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர், இதன் காரணமாக வாழைத்தார் விலை கிடுகிடுவென உயர்ந்தது,அதன்படி பூவன் வாழைத்தார் 400-க்கு விற்றுவந்த பழம் இரண்டு மடங்காக விலை உயர்ந்து அதிகபட்சமாக 1000ரூபாய்க்கும், ரஸ்தாலி 350 ரூபாய்க்கு,பச்சை நாடான் 500 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 400 ரூபாய்க்கு ஏலம் போனது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.