யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கில் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் யூடியூப் தளத்தில் அவதூறுகள் பரப்பியதாக
தொடரப்பட்ட மான நஷ்ட ஈடு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக யூடியூபர் ஜோ மைக்கேல் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்த நிலையில் அவருக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.