Skip to content

இந்தியா-,இலங்கை மோதும் 1நாள் போட்டி….மதியம் 1.30 மணிக்கு தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடக்கிறது. போட்டி மதியம் 1.30 மணிககு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார். மற்றபடி முன்னணி வீரர்கள் அனைவரும் கைகோர்ப்பதால் இந்திய அணி வலுவடைந்துள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் இந்த தொடர் இலங்கை வீரர்கள் அனைவருக்கும் முக்கியமானதாகும். போட்டியை சிறப்பாக தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப நன்றாக தயாராகி உள்ளோம். இது அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று தோன்றுகிறது.’ என்றார். இதுவரை… இவ்விருஅணிகளும் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 93-ல் இந்தியாவும், 57-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டை ஆனது. 11 ஆட்டங்களில் முடிவு இல்லை.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!