கோவை, தடாகத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 46 கூலித்தொழிலாளியான இவர் காலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து இருந்த பாட்டிலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேலுச்சாமி கூறியதாவது எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் .அவருக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை அறிந்த அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினேன்.
தற்போது அந்த வாலிபர் மீண்டும் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் இது குறித்து தடாகம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொழிலாளி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கும் சம்பவம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
மகளுக்கு பாலியல் தொல்லை தரும் வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
கோவை, தடாகத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 46 கூலித்தொழிலாளியான இவர் காலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து இருந்த பாட்டிலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேலுச்சாமி கூறியதாவது எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் .அவருக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை அறிந்த அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினேன்.
தற்போது அந்த வாலிபர் மீண்டும் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் இது குறித்து தடாகம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொழிலாளி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கும் சம்பவம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.