திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 15.12.2023ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், A.அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும், கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும்
தவறாது கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திரளாக செல்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது