மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். ரேணுகா காத்தூனை கடந்த 24ம் தேதியில் இருந்து காணவில்லை என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கணவர் முகமதுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வௌியானது. அதன்.. மனைவி ரேணுகாவின் நடத்தை மீது கணவர் முகமதுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரேணுகா பியூட்டி பார்லர் பயிற்சியில் சேர்ந்து பியூடிசியனாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக பல முன்பின் தெரியாத ஆண்களிடம் அவர் பேசியது கணவர் முகமதுவுக்கு எரிச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய தினம் மனைவியை தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காவ்வாய் பகுதிக்கு முகமது சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை சாக்குப்பையில் போட்டுள்ளார். பின்னர் மகாநந்தா நதியில் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு குழு உடல் கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, போலீசாசார் ஒரு சூட்கேஸில் உடற்பகுதியைக் கண்டுபிடித்தனர். ஆனால் தலை மற்றும் பிற உறுப்புகள் இன்னும் காணவில்லை. இந்த கொலை சம்பவம் மேலும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை தொடர்ந்து அதே பாணியில் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வு சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
