பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, உள்ளிட்டோரின் திருஉருவ சிலைக்கு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளானோர் கூடி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திர காசி, மருத ராஜா நகர கழக செயலாளர் ராஜபூபதி
ஒன்றிய செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.