ஜனவரி 26ம் தேதி டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். கடந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவம் அமையப்பெற்ற அலங்கார ஊர்தி அனுப்பப்பட்டது. அந்த ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
எனவே அந்த ஊர்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கு மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
மத்திய அரசின் தேர்வு கமிட்டியினர், தமிழக அரசின் அலங்கார ஊர்தியை தேர்வு செய்து உள்ளனர். இதுபோல அசாம், அரியானா, குஜராத், உ.பி. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.