Skip to content

குடிப்பழக்கத்திற்கு அடிமை…. தூய்மை பணியாளர் தற்கொலை…

திருச்சி, பொன்மலை கணேசபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாலி ( 49).இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஈஸ்வரி மகன்,மகளுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று விட்டார். பின்னர் வாலி மட்டும் தனியாக பொன்மலையில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் ஈஸ்வரி மறுத்துவிட்டார். இந்நிலையில் மனம் உலைச்சலில் இருந்த வாலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது சகோதரர் ஜெயகோபி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!