Skip to content
Home » 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

  • by Senthil

சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்து வரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.  வரி ஏய்ப்பு  புகாரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சோதனை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!