Skip to content

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவி வேண்டுகோள்…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பாரப்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கூடத்துடன் கூடிய மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மதுபான கடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பள்ளிகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. மதுபான கூடத்துடன் செயல்படும் இந்த கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் இயங்குவதாகவும், அப்பகுதியை கடந்து செல்லும்போது பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த கடையை அகற்றக்கோரி பலமுறை பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மதுபான கடை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து

அப்பகுதிக்கு வந்த கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் தற்காலிகமாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது அரசு மதுபான கடையை அகற்றக்கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து அரசு பள்ளி மாணவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!