பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 987 பயனாளிகளுக்கு
ரூ.20கோடியே85லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற வரும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன், துறை சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் தரேஷ்அகமது, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.