Skip to content
Home » தாறுமாறான வேகத்தால் விபத்து….மயிரிழையில் உயிர்தப்பிய ரிஷப் பண்ட்

தாறுமாறான வேகத்தால் விபத்து….மயிரிழையில் உயிர்தப்பிய ரிஷப் பண்ட்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டில்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே கார் தாறுமாறான வேகத்தில் சென்றது.

திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே  கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்தில்  பண்ட் மயங்கி இருந்தால் அவரும் காருடன் எரிந்து போயிருப்பார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் பண்ட் கார் ஓட்டிய நிலையில் கண் அயர்ந்திருக்கலாம். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!