Skip to content
Home » மாஜி எம்.பி. மஸ்தான் கொலை… டிரைவர் உள்பட 5 பேர் கைது… திடுக் தகவல்கள்

மாஜி எம்.பி. மஸ்தான் கொலை… டிரைவர் உள்பட 5 பேர் கைது… திடுக் தகவல்கள்

  • by Senthil

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார்.

இதற்கிடையே 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மஸ்தான்  கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

மஸ்தானின் வாயிலில் துணியை அமுக்கி கழுத்தை நெரித்து  அவரை கொலை செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக மஸ்தானின் சகோதரர் மருமகன்,  இடிரைவர் இம்ரான் உள்பட 5 பேரில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!