Skip to content
Home » நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  நீட் விவகாரத்தில்  தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராக  செயல்படும் கவர்னர் ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்  நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடந்தது.

மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடந்ததால், மதுரையில் மட்டும் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம் நடத்தப்படவில்லை. அங்கு 23ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உண்ணாவிரதம் 24ம் தேதி(வியாழன்)க்கு மாற்றப்பட்டு  உள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!