பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். உடனடியாக அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து மோடியின் சகோதரர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி ஆஸ்பத்திரிக்கு சென்று தாயாரின் உடலை சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றினார். வீட்டுக்கு உடல் கொண்டு வந்ததும், அவரது உடலுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
பின்னர் உடல் ஸடெச்சரில் ஏற்றப்பட்டு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் மோடி உள்பட 4 பேர் தாயார் உடலை சுமந்து சென்றனர். காலை 8.45 மணி அளவில் ஹீராபென் உடலுக்கு இறுதிச்சடங்குகள் தொடங்கின. 9.15 மணிக்கு காந்தி நகரில் மயானத்தில் உள்ள சிதையில் உடல் வைக்கப்பட்டது. 9.30 மணிக்கு மோடி தாயார் உடலுக்கு தீ மூட்டினார். பின்னர் மோடியும், அவரது சகோதரரும் கும்பிட்டபடி சிதையை சுற்றி வந்தனர். தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த யாரும் நோில் வரவேண்டாம்.திட்டமிட்டபடி பணிகளை செய்வதே மோடியின் தாயாருக்கு செலுத்தும் அஞ்சலி எனவே அவரவர் பணிகளை தொடருங்கள் என மோடி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.