Skip to content

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு எண்ணை காப்பு சாற்றி,பால், தயிர்,

 

பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!