Skip to content

வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

வேதாரண்யம் காவல் சரகம், கோடியக்கரையில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டையைச் சேர்ந்த  பாண்டியன்(46) என்பவரக்கு சொந்தமான படகில்  வாணகிரி பொம்மநாட்டான் மகன் சக்திவேல்(20),  அதே ஊரைச்சேர்ந்த  அஞ்சப்பன் மகன் சக்திவேல்(40), கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்த  திருச்செல்வம்(20)  ஆகிய 4பேரும் கடந்த 27ம் தேதி மதியம் 2 மணிக்கு  கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் விரித்திருந்த அவர்களது வலையை காணவில்லை. எனவே வலையை தேடி சென்றபோது அவர்கள் இந்திய  கடல் எல்லையை கடந்து  இலங்கை வல்வெட்டித்துறை கடற்கரைக்கு சென்று விட்டனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வழி தவறி வந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!