Skip to content
Home » ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Senthil

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்காக  அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சவுத்ரி(14),  குப்புராஜ்(17), ஜெகதீஷ்(18) ஆகியோர் காசிபாளையம் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் அவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர்.  சிறிது நேரத்தில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  தகவல் அறிந்ததும் 3 பேரின் குடும்பத்தினர் பதறியபடி அங்கு வந்தனர். இந்த சம்பவம் கொடுமுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!