Skip to content
Home » திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை கடைகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில் ஒட்டகத்தை வைத்து ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருப்பதை அறிந்த சிலர் இதுபற்றி திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி மணப்பாறை கால்நடை மருத்துவர் செந்தில்குமார் அந்த ஒட்டகத்தை

அழைத்துச் சென்று அதை மருத்துவ பரிசோதனை செய்தனர். ஒட்டகம் நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்தது. இருப்பினும் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெறக்கூடாது என்று அறிவுறுத்தி ஒட்டகத்தை அழைத்துச் செல்லும்படி அனுப்பி வைத்தனர்.
போலீசாரும் அந்த பகுதிக்கு வந்து ஒட்டகத்தை வைத்து பிச்சை எடுப்பதை பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!