நெய்வேலி என்.எல்.சி. நிறுவன விவகாரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து புவனகிரி எம்.எல்.ஏ. அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.