Skip to content
Home » முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏ.வி.குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சபரி என்கின்ற சபரிநாதன் வயது 28. இவருக்கும் பூக்கொள்ளை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சபரிநாதன் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த பட்டுக்கோட்டை பூக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் மகன் தினேஷ்குமார் 27, பாளையம் சின்னசாமி மகன் உதயகுமார் 25, ஏ வி குளம் கணேசன் மூர்த்தி மகன் வீர கணேஷ் 19,@ ராஜா மகன் கோகுலகிருஷ்ணன் 19, கே.என். பாளையம் பகுதியை சேர்ந்த மணிமுத்து மகன் மணிகண்டன் 23 ஆகியோர் சேர்ந்து சபரிநாதன் மீது மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டினர். இது குறித்து சபரிநாதன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமார், உதயகுமார், வீரகனேஷ், கோகுலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!