Skip to content
Home » திருச்சி அருகே சாலை பணியின் போது கவிழ்ந்த கிரேன்……

திருச்சி அருகே சாலை பணியின் போது கவிழ்ந்த கிரேன்……

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்ற நிலையில் சாலையில் இருந்த புளிய மரத்தை அகற்றும் பொழுது கிரேன் தவறி கவிழ்ந்தது இதில் கிரேன் ஆபரேட்டர் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித உயிர் சேதம் என்று அனைவரும் உயிர் தப்பினர். தொட்டியத்தில் தனியார் தீப்பெட்டி கம்பெனி அருகில் 150 வருடத்திற்கு மேலாக இருந்த  மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

மரத்தை அப்புறப்படுத்தும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்தது இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கீழே விழுந்த கிரைனை மற்றொரு கிரேன் மற்றும் ஜேசிபியின் உதவியுடன் அதனை தூக்கி நிறுத்தப்பட்டது உடனடியாக  அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!