Skip to content
Home » ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

  • by Senthil

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023ல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜிதாவின் மீதான அந்த வழக்கானது தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும் மேலும் குண்டாஸ் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும் ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக தரும்படி  எஸ்ஐ ரமா கேட்டுள்ளார். அஜிதா தான் ஏற்கனவே தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தன்னால் தற்போது கடை நடத்த இயலாததாலும் தன்னால் பத்தாயிரம் தர முடியாது என்று கேட்டுக் கொண்டதன் பேரில், எஸ்.ஐ. ரமா அட்வான்சாக ரூபாய் 3000 கொடுத்தால் மட்டுமே உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி  மணிகண்டன் தலைமையில்  ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினரின் ஆலோசனையின் பேரில். அஜிதாவிடம் இருந்து எஸ்.ஐ. ரமா இன்று  காலை சுமார் 11.மணி அளவில் ரூ.3000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அதைத்தொடர்ந்து எஸ்.ஐ. ரமாவிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது  பல தகவல்கள்  போலீசாருக்கு கிடைத்தது.

விபசார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது என்றும் ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எஸ்.ஐ.ரமாவின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம்  செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரமா மாதா மாதம் லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் எஸ்.ஐ. ரமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!