Skip to content

கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்ரீ சாய் குத்துச்சண்டை கிளப்,கரூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான முதலாம் ஆண்டு குத்துச்சண்டை போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 40 வயது முதல் 80 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர் கலந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்றது. சப் ஜூனியர், ஜூனியர், மற்றும் சீனியர் என்ற பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து

கொள்ளும் வகையில் நடைபெற்ற போட்டியில் அதிகப்படியான புதுக்கோட்டை சேர்ந்த வீரர்கள் பதக்கத்தை தட்டி சென்றனர். சப் ஜூனியருக்கான போட்டியில் திருச்சி மாவட்ட சேர்ந்த வீரர்களும்,ஜூனியருக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை சென்றனர். மேலும் யூத் மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!