புதுக்கோட்டை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அரசு உதவிப்பெறு்ம உயர் , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையால் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தமிழ் கையெழுத்துப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைதொடர்ந்து புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ்
சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் பொருட்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.