Skip to content
Home » கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

  • by Senthil

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்ற நபர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக பெர்க்ளீன் ஷெரிலை ஆஜர்ப்படுத்த நேற்று

காலை காவல்துறையினர் கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தநிலையில், பிற்பகல் பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, திடீரென நீதிமன்றத்தில் இருந்து காவலர்களை விட்டு ஓடிச் சென்றார். நல்வாய்ப்பாக சிறிது தூரத்திலேயே அவரை பிடித்த காவலர்கள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!