Skip to content

திருச்சி மாநகரில் 8 கஞ்சா வியாபாரிகள் கைது – 10 ஆயிரம் பணம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் மாநகரின் பல இடங்களில் கஞ்சா விற்றதாக 8 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.10,000 பணம் மற்றும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!