Skip to content
Home » பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன ர். இருந்த போதிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் இளைஞர் ஒருவர் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடுதுறை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்திற்கு இடமாக சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் அவரது கைப்பையில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் செம்பனார்கோவில் நக்கீரர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் கணேஷ் என்பதும் சென்னை பாடியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதும் அவ்வப்போது சென்னையில் இருந்து கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளான். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!