மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை மாடுகள் 8 பசு என மொத்தம் 11 மாடுகளும், 200 ஆடுகளும் உள்ளன. 17ஆம் தேதி மாலை நாலு மணி அளவில் கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இபி போஸ்டில் இருந்து போர்வெலுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உரசி ஒரு எருமை மாடு மற்றும் நான்கு பசு மாடு ஆகியன வயலிலேயே உயிரிழந்தது. தகவலைத் தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் ஐந்து மாடுகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
