முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஓ.பி.எஸ் பெரியகுளம் விரைந்தார்.
