Skip to content
Home » கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

  • by Senthil

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான், முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை  கைது செய்தனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும்  பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம், கோட்டைமேடு வின்செண்ட் சாலை ஹவுசிங் யூனிட், குனியமுத்தூர் பிருந்தாவன் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் டி காலனி பி,ஆர். கந்தசாமி வீதியில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி(எ) சையது ரகுமான் வயது( 51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழு சையது ரகுமான் வீட்டில் அவரிடமும் அவரது மனைவி பர்வீனா சுல்தான் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியும் வீட்டில் உள்ள ஆவணங்களையும் சுமார் இரண்டு மணி நேரமாக ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்..

கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!