Skip to content
Home » நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. கார்த்தி சிதம்பரம் பயணித்த கார் டொயோட்டா பார்ச்சூனர் என்பதால் அதன் முன்பக்கம் மட்டும் சேதாரம் ஆனது.

காரில் பயணித்த கார்த்தி சிதம்பரம் உட்பட யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தனது காரை அங்கேயே விட்டுவிட்டு மாயனூர் காவல்துறையினருக்கு விபத்து குறித்து தகவல்  கொடுத்து கார்த்தி சிதம்பரம் மாற்றுக் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் கார் விபத்திய சிக்கிய தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் நடந்த விபத்து குறித்து கரூர் மாவட்டம் மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!