Skip to content
Home » கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டையில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கருணா
ப்தி விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டு வந்தது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

முன்னதாக 8ம்  தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தனம் லட்ச்சார்ஜனை, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.

இன்று அதிகாலை நான்காம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் குளித்தலை மற்றும் மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!