பெரம்பலூர் மாவட்டம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில், 2022-2023-ம் ஆண்டு ”முதலமைச்சர் கோப்பைக்கான” மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர்
க.கற்பகம் (08.02.2023) தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் ஏறக்குறைய 7,000 பேர் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்கள். மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசு தலா ரூ.2000/-, மூன்றாம் பரிசு தலா ரூ.1000/- பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.