திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மரிய பீவி மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மரியா பீவிஇறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….
- by Authour
