தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52). இவர் சண்முகம் கடைக்கு வந்து கடனுக்கு மளிகை பொருட்கள் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே மளிகைப் பொருட்கள் வாங்கிய கடனை தொகையை கொடுக்கும்படி சண்முகம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், சண்முகத்தை தாக்கியுள்ளார். இதுகுறித்து சண்முகம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் தாலுக்கா புதுசா வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..
- by Authour
