புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு 27.03.2025 அன்று முதல் அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.