திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த பார்த்த போது, மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 2 அரை கிராம் தங்க மோதிரம் , மற்றும் 10 ஆயிரம் பணம் திருடி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மன்சூர் அலிகான் (வயது25) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து இரண்டு கிராம் தங்கம் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…
- by Authour
