இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சிக்கு பின்னர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். உலகமே உற்று நோக்கிய இந்த நிகழ்வை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள குட் சமாரிட்டன் என்ற தனியார் பள்ளியில் மாணவ-மாணவிகள்
வெல்கம் சுனிதா வில்லியம்ஸ் என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியன்ஸ்க்கு வரவேற்பு தெரிவித்தனர். மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 250 மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.