கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுத சென்றார். அப்போது அந்த மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் பணியில் இருந்தார்.
இந்நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அந்த 17 வயது மாணவியின் தோலில் கை வைத்து மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனால் அந்த மாணவியால் தேர்வினை சரிவர எழுத முடியாமல் திணறியுள்ளார். இந்நிலையில் தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த மாணவி, மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியிடம், அவர் பயின்ற பள்ளியின் முதல்வர், ஏன் சோகமாக இருக்கிறாய். தேர்வு சரியாக எழுதவில்லையா என கேட்டுள்ளார்.
அப்போது தேர்வு அறையில் தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் நடந்து கொண்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முதல்வர் இது குறித்து, அந்த தேர்வு மையத்தின் பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் ஆசிரியர் ரமேசை அழைத்து சென்று விசாரணை செய்து பின்னர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.